“IMF கடன் கிடைத்தவுடன் உலகெங்கிலும் இருந்து கடன் கிடைக்கும்”

400

முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தவறான ஆலோசனையினால் நாடு அராஜகமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தேயில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர், பொருளாதார நெருக்கடிக்கு ஐக்கிய தேசியக் கட்சி காரணம் அல்ல.

விரைவில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற முடியும் எனவும் அதன் பின்னர் பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கக் காத்திருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here