பொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

508

அரசாங்கத்தை தெரிவு செய்வது அல்லது மாற்றுவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், வீதிகள் அதற்கு தெரிவு இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல பலன்கள் விரைவில் கிடைக்கப் போவதாகவும், பொருளாதார வீழ்ச்சியால் நாடுகள் அராஜகமாக மாறும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே ஒரு நாட்டின் அரசியலமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி திருகோணமலை விமானப்படை தளத்தில் விமானப்படை கெடட்களை கலைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here