follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுதனியார் வைத்தியசாலை ஊழல் : விசாரணைகள் மந்தநிலையில்

தனியார் வைத்தியசாலை ஊழல் : விசாரணைகள் மந்தநிலையில்

Published on

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து பெண் நோயாளி ஒருவருக்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபைக்கு முறைப்பாடு ஒன்று கடந்த 23ம் திகதி கிடைத்துள்ளது.

இந்த வைத்தியசாலையில் 12, 264 ரூபாவிற்கு விற்கப்படும் LYORTAM எனும் மருந்தினை 33,400 ரூபாவிற்கும், 6,796 ரூபாவிற்கு விற்கப்படும் மருந்தொன்று 17,030 ரூபாவிற்கும் குறித்த வைத்தியசாலையில் நோயுற்றிருந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த இந்தப் பெண்ணுக்கே இந்த மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குறித்த பெண்ணின் மகன் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் உண்மைகளை ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையின் செயலாளர் வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இது வரைக்கும் குறித்த வைத்தியசாலையில் மருந்துகள் அதிக விலைக்கே விற்கப்படுவதாக எமக்கு கிடைக்கும் வைத்தியசாலை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

2027 முதல் சொத்து வரி அறிமுகம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த...