follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்

Published on

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில் எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் இலங்கையின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நீதித்துறையின் சுதந்திரம் போன்றவை குறித்து அங்கு விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க தலைமையில் இலங்கை தரப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது வழக்கமான அமர்வு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

இலங்கை தொடர்பில் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் தமது நாட்டுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தாது என ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி கருணாதிலகா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...