follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"நான் அரசாங்கத்திற்கு செல்லமாட்டேன்.." - ராஜித

“நான் அரசாங்கத்திற்கு செல்லமாட்டேன்..” – ராஜித

Published on

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது தாம் முதலில் விருப்பத்தை வெளிப்படுத்திய போதிலும், அரசாங்கத்தில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வினவியபோது, ​​அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“..முன்னதாக, அரசாங்கம் தேசிய அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிட்டபோது, ​​கோரிக்கைகள் இருந்தன. அவர்கள் (அரசு) நாட்டின் நலனுக்காக நான் ஒரு சவாலை ஏற்கத் தயாரா என்று கேட்டதற்கு, நான் ஆம் என்று சொன்னேன். ஆனால் தற்சமயம் அதுபோன்ற திட்டங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என்று நினைக்கிறேன்..”

அரசாங்கத்தில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கும் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை” என்றார்.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சுகாதார அமைச்சுப் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...