சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (7) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 16 ஆம் திகதி முகாமைத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவிற்கும் மற்றுமொரு மாணவர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சிரேஷ்ட மாணவர்கள் மாத்திரம் இன்று (7) முதல் தமது கற்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், ஏனைய பீடங்கள் ஆரம்பாகும் தினம் விரைவில் அறிவிக்கப்படுமென நிர்வாகம் தெரிவித்துள்ளது.