மஹிந்தவுக்கான பயணத்தடை நீக்கம்

521

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏப்ரல் 20 முதல் 30 வரை விலக்கிக் கொண்டது.

தென்கொரியாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here