இன்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
ஒரு பாணின் விலை 150 ரூபா தொடக்கம் 180 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வாறான எந்தவொரு விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும் எனவும் ஜயவர்தன தெரிவித்தார்.
பன் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.