follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுமத்திய கலாச்சார நிதியத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த குழு

மத்திய கலாச்சார நிதியத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த குழு

Published on

மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை நியமிக்க கோப் குழு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய கலாசார நிதியத்தின் செயல்பாடுகள் தொடர்பான சிறப்பு தணிக்கை அறிக்கையின் மூலம் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து நவம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற கோப் குழு விசாரணை நடத்தியது.

பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் பொது நிறுவனங்களுக்கான குழு கூடியது.

விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவிடம் தெரிவிக்கப்பட்ட உள்ளக விசாரணைக் குழு குறித்து கலந்துரையாடுவதற்கு இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், மத்திய கலாசார நிதியத்தின் நிர்வாக சபை கூட்டங்களை நடத்துவது குறித்தும், அந்த நிதி உரிய முறையில் செலவிடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கடந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் 209வது ஆட்சி மன்றக் கூட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து விவாதிக்கவும் குழு உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதன்படி 209 ஆவது கூட்டத்தின் தீர்மானங்களுக்கு 11 உறுப்பினர்களில் 07 பேர் மாத்திரமே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் முன்னாள் பிரதமர் உட்பட 04 பேர் கையொப்பமிடவில்லை எனவும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தின் கையொப்பப் பட்டியலில் கையொப்பமிட்ட 7 பேரும் பயன்படுத்திய கையொப்பங்களுக்கும் கடந்த ஆட்சி மன்றக் கூட்டங்களில் அவர்கள் பயன்படுத்திய கையொப்பங்களுக்கும் முரண்பாடு காணப்படுவதாகவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

209ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் 210ஆவது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட ஆளும் குழுவில் அங்கம் வகித்த அப்போதைய பிரதமரின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரும் அவ்வாறான சந்திப்பில் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நீண்ட கலந்துரையாடலின் பின்னர், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு கோப் குழுத் தலைவர் சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...