follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபோராட்டத்திற்கு வந்த இராணுவ வீரர்கள் மரத்தடிகளுடன் வந்த கதை பொய்யா?

போராட்டத்திற்கு வந்த இராணுவ வீரர்கள் மரத்தடிகளுடன் வந்த கதை பொய்யா?

Published on

கடந்த 7ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைக்க வந்த இராணுவத்தினரின் கைகளில் இரும்பு மற்றும் மரத்தடிகள் இருந்ததா என்பதை கண்டறிய இலத்திரனியல் தடயவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் குழுவொன்று இரும்பு மற்றும் மரத்தடிகளை எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பரவும் புகைப்படங்களை அடையாளம் காண விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புகைப்படங்களும் பின்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதால் அதன் நம்பகத்தன்மையை தெளிவாக உறுதிப்படுத்த முடியாது என்றும், புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளதால் இராணுவ வீரர்கள் கையில் தடிகளை பிடித்துள்ளனர் என்று உறுதியாக கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

அந்தப் படம் பழைய படமா அல்லது அன்றைய படமா என்பதைச் சரிபார்க்க அதிக நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...