follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசாதாரண தர ஒத்திகை பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளன

சாதாரண தர ஒத்திகை பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளன

Published on

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் 11ம் தர மாணவர்களுக்காக நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர ஒத்திகை பரீட்சை தொடர்பான பல பாடங்களின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பொதுப் பரீட்சை தொடர்பான சிங்களம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்கள் தொடர்பான வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் மத்திய மாகாணத்தில் அந்த தரங்களில் கல்வி கற்கும் பெருமளவிலான பிள்ளைகளுக்கு அநீதி ஏற்படுகிறது.

இவ்வாறான முக்கியமான பரீட்சையில் கூட இரகசியத்தன்மையை பாதுகாக்க முடியாவிட்டால், மாகாணத்தின் கல்வியின் நிலை குறித்து சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...