follow the truth

follow the truth

May, 20, 2024
Homeவிளையாட்டு21 வயது கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு

21 வயது கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு

Published on

ஐவரி கோஸ்ட்டில் கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அண்மையில் அபிட்ஜானில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது முஸ்தபா ஜில்லா என்ற 21 வயது வீரர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த வீரரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, வீரர்களின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில், ஐவரி கோஸ்ட்டில் மூன்று கால்பந்து வீரர்கள் திடீர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு...

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...