follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகுழந்தையின் தாயை கைது செய்த பொலிஸ் அதிகாரியிடம் விசாரணை

குழந்தையின் தாயை கைது செய்த பொலிஸ் அதிகாரியிடம் விசாரணை

Published on

சிசுவை புகையிரதத்தின் மலசலகூடத்தில் விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (11) குழந்தையின் தாயை கைது செய்ததுடன், அவரை சங்கடமாக்கும் முறையி நடந்து கொண்டதாக அவரைக் கைது செய்த பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கு இணங்காதமை தொடர்பிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தாயை பொலிசார் கைது செய்தமை, சந்தேக நபரை விசாரணை செய்தல், விசாரணையின் விபரங்களை கருத்தில் கொள்ளாமல் பெண்ணை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...