follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1நான்கு மாகாணங்களின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நான்கு மாகாணங்களின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Published on

நாளை (15) நடைபெறவுள்ள தொழிற்சங்க ஊழியர்களின் ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்புக்கு சமாந்தரமாக மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை வடமேற்கு, வடமத்திய, வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் இந்த வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்தத்தின் போது அவசர சிகிச்சை சேவைகள் தொடரும் எனவும், சிறுவர், மகப்பேறு, புற்றுநோய், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுகள் மற்றும் தேசிய மனநல சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வேலை நிறுத்தங்களுக்கு தமது சங்கம் ஆதரவளிக்காது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை 22 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

ஜூலை 22 ஆம் திகதி முதல் 25 வரை கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள தினப்பணிகள் சபாநாயகர்...

2030 இல் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல்...

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள்...