சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை குலைத்து நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளுவதற்கு தீவிரவாத அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் முயற்சிப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத சதி தொடர்பான தகவல்கள் சங்கத்திடம் உள்ளதாகவும், அதனை இரண்டு வாரங்களில் வெளிப்படுத்துவதாகவும் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு போராட்ட நாட்களில் 15,000 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
சம்பளம் பெறாமல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருந்தால் மட்டுமே தொழிற்சங்க போராட்டங்களுக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவளிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.