கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்திற்குள் இன்று(14) உள்ளூர் சுற்றுலா பயணிகள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே உள்ளே செல்ல முடியும் என பொலிஸார் இன்று (14) தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இன்று சுதந்திர சதுக்க வளாகத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் பொது நிர்வாக அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்
சுதந்திர சதுக்க வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.