follow the truth

follow the truth

May, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபல பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கொழும்புக்கு

பல பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கொழும்புக்கு

Published on

பொலிஸ் மா அதிபரின் அங்கீகாரத்துடன் மேல் மாகாணத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் கலவர எதிர்ப்பு உபகரணங்களை வழங்குமாறு 12 பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கண்ணீர்ப்புகை முகமூடிகள், கலகக் கவசங்கள், பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் இறப்பர் பொடிகளை வழங்குமாறு எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம், மட்டக்களப்பு, எல்பிட்டிய, குருநாகல், மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இருந்து இந்த உபகரணங்கள் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தவிர தங்காலை, கண்டி, கந்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கோரப்பட்டுள்ளன.

உரிய வாகனத்தில் மத்திய ஆயுதக் களஞ்சியசாலைக்கு உபகரணங்களை கொண்டு வருமாறு பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அந்த பிரிவுகளின் மூத்த டி.ஐ.ஜிக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...