follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபல பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கொழும்புக்கு

பல பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கொழும்புக்கு

Published on

பொலிஸ் மா அதிபரின் அங்கீகாரத்துடன் மேல் மாகாணத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் கலவர எதிர்ப்பு உபகரணங்களை வழங்குமாறு 12 பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கண்ணீர்ப்புகை முகமூடிகள், கலகக் கவசங்கள், பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் இறப்பர் பொடிகளை வழங்குமாறு எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம், மட்டக்களப்பு, எல்பிட்டிய, குருநாகல், மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இருந்து இந்த உபகரணங்கள் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தவிர தங்காலை, கண்டி, கந்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கோரப்பட்டுள்ளன.

உரிய வாகனத்தில் மத்திய ஆயுதக் களஞ்சியசாலைக்கு உபகரணங்களை கொண்டு வருமாறு பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அந்த பிரிவுகளின் மூத்த டி.ஐ.ஜிக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...