இம்ரானின் கைது PSL தொடரை பாதிக்காது

581

இம்ரான் கானைக் கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அதன் போட்டியை திட்டமிட்டபடி லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்துவதாகக் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் எட்டாவது தொடர் கராச்சி, முல்தான் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் நடைபெற்ற போட்டிகளுக்குப் பிறகு அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

கடைசி நான்கு போட்டிகள் இம்ரான் கானின் ஜமான் பார்க் இல்லத்திலிருந்து 10 கிமீ (ஆறு மைல்) தொலைவில் உள்ள மைதானத்தில் நடைபெறும். செவ்வாயன்று, ஜமான் பூங்காவில் நடந்த மோதல்கள் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளுக்கான பயிற்சி அமர்வு இரத்து செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here