follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஎம்முடன் ஒன்றாக படுத்துத் தூங்கியவர்களும் பாராளுமன்றத்தில் உள்ளனர்..- பிரபல ஓரினச்சேர்க்கையாளர் அம்பலம்

எம்முடன் ஒன்றாக படுத்துத் தூங்கியவர்களும் பாராளுமன்றத்தில் உள்ளனர்..- பிரபல ஓரினச்சேர்க்கையாளர் அம்பலம்

Published on

ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருப்பதாக அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையர் அமில சம்பத் எனபவர் தெரிவித்திருந்தார்.

தனியார் இணைய சேனல் ஒன்றில் இடம்பெற்ற ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட அவர், எந்த நேரத்திலும் 10%-12% ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்று கூறுகிறார்.

அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் இருபாலினத்தைப் பற்றி எந்த உணர்வும் இல்லை என்றும், ஓரினச்சேர்க்கை ஒரு பொதுவான தனிமனித உரிமை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சமூகத்தில் உள்ளவர்களுக்கும் அதே உரிமைகள் இருக்க வேண்டும் என்றும், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது என்றும் கூறினார்.

“.. இலங்கையில் முன்னர் ஓரினச்சேர்க்கை என்பது ஒரு மன நோயாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் அது இப்போது இல்லை. எனக்கு பெண்கள் மீது பாலியல் ரீதியாக எந்த உணர்வுகளும் இல்லை. அம்மா, தங்கை, அக்கா என்ற உணர்வு மட்டுமே.. எனக்கு 29 காதலிகள் 3 காதலர்கள். எனக்கு இப்போது 50 வயதாகிறது. ஆனால் எனக்கு 29 காதலிகளிடமிருந்தும் கிடைக்காத உணர்வுகளை நான் எனது காதலனிடம் காண்கிறேன்.

இலங்கையில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக்கினால் நல்லது என்று நினைக்கிறேன். அது இப்போதைக்கு நடக்காததொன்று, ஆனால் அதை விட்டு ஓரினச்சேர்க்கை என்பதை வாய்விட்டுக் கூற வழிவகுக்க வேண்டும் என்கிறார்.

நான் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை முடித்ததும் எனக்கு புலமைப்பரிசில் ஒன்று கிடைத்தது. அதனூடாக நான் அமெரிக்கா சென்றேன், அங்கு நான் ஓரினச்சேர்க்கை குறித்து ஆய்வுகளின் ஈடுபட்டு அந்த உரிமைக்காக கதைத்தேன். அதற்குப் பின்னர் நான் ஓரினச்சேர்க்கை குறித்து தீர்மானித்தேன் அமெரிக்காவில் குடியிருப்பது தான் சரி என்று..

நான் இலங்கை அரசியலை எப்போதும் ஓரினச்சேர்க்கைக்காக பாவிக்கவில்லை. ஆனால் நான் ஓரினச்சேர்க்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சில விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்தேன். அதற்கு மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவும் பங்குபற்றியிருந்தார். நான் அவரை மதிக்கிறேன், பாராளுமன்றில் இருந்து கூட பயமின்றி ஓரினச்சேர்க்கை குறித்து

பாராளுமன்றில் ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள். நான் பெயர் ஊர்களை கூற மாட்டேன். அவர்கள் என்னுடன் எந்தத் தொடர்பையும் பேணியதில்லை, என்னுடைய நண்பர்கள் அவர்களுடன் பாலியல் ரீதியாக தொடர்புகளை கொண்டவர்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

ஆனால், இன்னும் ஆண் நண்பர்களுடன் தொடர்புடைய ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் இருக்கிறார்கள். பெயர் ஊர் என்பவற்றை நான் கூறுவதில்லை, தெரிந்தவர்களுக்கு தெரியும். இதில் திருமணமானவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உலகிற்கு காட்டுவதற்கு குடும்பமாக வாழ்கிறார்கள். இது தொடர்பில் கதைக்கக் காரணம் இலங்கை வாழ் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக, அது இன்றி எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..” என்றும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...