follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுவயிற்றைப் பற்றி மட்டுமல்ல நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமாம் : மொட்டுக் கட்சிக் அறிவுரை

வயிற்றைப் பற்றி மட்டுமல்ல நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமாம் : மொட்டுக் கட்சிக் அறிவுரை

Published on

சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் மக்கள் வயிற்றைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி யோசிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

வயிற்றை பற்றி மாத்திரம் சிந்தித்துவிட்டு நாட்டை பற்றி சிந்திக்காமல் விட்டுவிட்டால் எதிர்கால சந்ததியினரின் சாபத்திற்கு நாம் அனைவரும் உள்ளாக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக பொருளாதாரம் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் அதன் தாக்கம் இலங்கைக்கும் ஏற்படும் எனவும், அவ்வாறு நேரிடும் போது அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து...