follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் கொடுக்க அநுர தயார்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் கொடுக்க அநுர தயார்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் இல்லை என அரசாங்கம் தொடர்ந்தும் கூறினால், தமது கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களின் கொடுப்பனவில் பாதியை வழங்கத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை எட்டிலிருந்து பத்தாயிரமாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பண விவகாரம் தடையாக இருக்குமானால் அதில் பாதி அல்லது 75 வீதத்தை நன்கொடையாக வழங்கத் தயார் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் பாதியாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதாக அவர் கூறினார்.

அரசாங்கத்திற்கு பணப்பிரச்சினை இல்லை, வாக்குப் பிரச்சினை என்பதே உண்மை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...