follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1கண்டி - மஹியங்கனை வீதியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு

கண்டி – மஹியங்கனை வீதியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு

Published on

கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று (19) மாலை பெய்த கனமழை காரணமாக 18வது வளைவு மற்றும் இரண்டாவது வளைவுக்கு அருகில் பாறை, மண் மேடு சரிந்து விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

நிலச்சரிவு பகுதிக்கு மேல் மற்றொரு இடத்தில் பெரிய பாறை சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சாலையை மூட பொலிசார் முடிவு செய்தனர்.

இதன்படி கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தண்ணேகும்புர சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியில் பயணித்து ரஜ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக மஹியங்கனை நோக்கி பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மஹியங்கனையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ரஜமாவத்தை சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியூடாக பயணித்து தன்னேகும்புர சந்தியில் இடப்புறம் திரும்பி கண்டி நோக்கி செல்ல முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...