follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு

அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த திகதியில் தபால் மூல வாக்குகளை வழங்க முடியாது என அரசாங்க ஊடகங்கள் தெரிவித்திருப்பதால், அந்தந்த திகதிகளில் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இது குறித்து ஆலோசிக்க வரும் 23ம் திகதி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருமென நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...