follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஇவ்வருட வெசாக் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டம்

இவ்வருட வெசாக் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டம்

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

“புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பூர்வாங்க கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹுனுபிட்டிய, கங்காராம விகாராதிகாரி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் கலாநிதி வண. பல்லேகம ரதனசார தேரர் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான .சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டனர்.

“புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” 2023 மே மாதம் 05, 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் கொழும்பில் உள்ள கங்காராம விகாரை, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

தேசிய வெசாக் வலயமாக பெயரிடப்பட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.

நல்ல நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்படும் இவ்வருட “புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” ஒரு முன்மாதிரியான வெசாக் பண்டிகையாக இருக்கும் என்று வண. கலாநிதி கிரிந்தே கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.

மேலும், வெசாக் பண்டிகையானது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறந்த வாய்ப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்ட தேரர், நாடு பொருளாதார ரீதியில் வலுப்பெற்று வரும் இக்காலத்தில் நேர்மறையாக சிந்தித்து நல்ல பிரவேசமொன்றைப் பெறவும், மக்களின் ஆன்மீக மனநிலையை போசிக்கவும் இது வழிவகுக்கும் என்றும் தேரர் தெரிவித்தார்.

“புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை” வெற்றியடையச் செய்வதற்கு அரச துறை மற்றும் தனியார் துறையினர் அனைவரினதும் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...