தேர்தலுக்கு பணம் தருகிறீர்களா? இல்லையா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 10 பில்லியனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கி தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன:-
“.. இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் பல விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அந்தத் தீர்ப்புகளின் படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்…” எனத் தெரிவித்திருந்தார்.