எதிர்வரும் 25ம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக முற்பகல் 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
நாளை 10 மணி நேர நீர்வெட்டினால் பின்வரும் பகுதிகள் பாதிக்கப்படும்.
• கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகள்
• மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபை பகுதிகள்
•கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபை
• இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகள்