follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் நெருக்கடி

பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் நெருக்கடி

Published on

பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் நெருக்கடியை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்று அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

பாகிஸ்தானின் 24 முக்கிய நகரங்களில் வசிக்கும் சுமார் 80 சதவீத மக்களுக்கு சுத்தமான தண்ணீரை உட்கொள்ளும் வாய்ப்பு இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

கராச்சியில் வசிக்கும் 16 மில்லியன் மக்கள் ஓடும் நீரைப் பருக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எதிர்கொள்ளும் இந்த கடுமையான தண்ணீர் நெருக்கடிக்கு முக்கிய காரணம் அந்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் தண்ணீருக்கான தேவை அதிகரிப்பு.

தோல்வியடைந்த ஆட்சியின் காரணமாக நீண்டகாலமாக நிலவும் பழைய மற்றும் பலவீனமான உட்கட்டமைப்புகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத நீர் குழாய் அமைப்புகளினால் தற்போதுள்ள நீர் ஆதாரங்கள் வீணாகி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறைந்த அளவிலான நீர் சேமிப்பு மற்றும் தேக்கி வைக்கும் வசதிகள் இல்லாமையால் பாகிஸ்தானில் தண்ணீர் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...