follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் நெருக்கடி

பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் நெருக்கடி

Published on

பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் நெருக்கடியை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்று அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

பாகிஸ்தானின் 24 முக்கிய நகரங்களில் வசிக்கும் சுமார் 80 சதவீத மக்களுக்கு சுத்தமான தண்ணீரை உட்கொள்ளும் வாய்ப்பு இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

கராச்சியில் வசிக்கும் 16 மில்லியன் மக்கள் ஓடும் நீரைப் பருக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எதிர்கொள்ளும் இந்த கடுமையான தண்ணீர் நெருக்கடிக்கு முக்கிய காரணம் அந்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் தண்ணீருக்கான தேவை அதிகரிப்பு.

தோல்வியடைந்த ஆட்சியின் காரணமாக நீண்டகாலமாக நிலவும் பழைய மற்றும் பலவீனமான உட்கட்டமைப்புகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத நீர் குழாய் அமைப்புகளினால் தற்போதுள்ள நீர் ஆதாரங்கள் வீணாகி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறைந்த அளவிலான நீர் சேமிப்பு மற்றும் தேக்கி வைக்கும் வசதிகள் இல்லாமையால் பாகிஸ்தானில் தண்ணீர் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ...