follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் நெருக்கடி

பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் நெருக்கடி

Published on

பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் நெருக்கடியை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்று அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

பாகிஸ்தானின் 24 முக்கிய நகரங்களில் வசிக்கும் சுமார் 80 சதவீத மக்களுக்கு சுத்தமான தண்ணீரை உட்கொள்ளும் வாய்ப்பு இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

கராச்சியில் வசிக்கும் 16 மில்லியன் மக்கள் ஓடும் நீரைப் பருக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எதிர்கொள்ளும் இந்த கடுமையான தண்ணீர் நெருக்கடிக்கு முக்கிய காரணம் அந்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் தண்ணீருக்கான தேவை அதிகரிப்பு.

தோல்வியடைந்த ஆட்சியின் காரணமாக நீண்டகாலமாக நிலவும் பழைய மற்றும் பலவீனமான உட்கட்டமைப்புகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத நீர் குழாய் அமைப்புகளினால் தற்போதுள்ள நீர் ஆதாரங்கள் வீணாகி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறைந்த அளவிலான நீர் சேமிப்பு மற்றும் தேக்கி வைக்கும் வசதிகள் இல்லாமையால் பாகிஸ்தானில் தண்ணீர் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...