follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை

Published on

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணையில்லா வழக்குகளை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் தலைமையக கட்டளைத் தளபதிகள், நிலையத் தளபதிகள் மற்றும் போக்குவரத்து திணைக்கள கட்டளைத் தளபதிகளை அழைத்து வாய்மொழியாக அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த பிறகு, அவர்கள் இரண்டு முறைகளில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் அந்த சாரதிகளை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் தலைமையகம் மற்றும் நிலையத் தளபதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், குறித்த வாகனத்தை வேறொரு நபருக்கு விடுவிப்பதற்கான திறன் பொலிஸாருக்கு இருந்தது. எவ்வாறாயினும், விபத்துக்களை குறைக்கும் வகையில், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை நிறுத்துமாறும், அவ்வாறு கைது செய்யப்படும் சாரதிகளை பொலிஸ் பிணை வழங்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...