follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும்"

“அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும்”

Published on

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சர்வாதிகார போக்கிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சி அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை பறித்து மக்களின் வாக்குரிமையை உதைக்கும் அரசாங்கத்தின் சர்வாதிகார வேலைத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், நீதித்துறை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் சர்வதேச சமூகம் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம் தேர்தலை புறக்கணித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

காலாவதியான உள்ளுராட்சி மன்றங்களுக்கான உப குழுக்களை நியமித்து அதற்கான அரச உதவியாளர்களை நியமிக்க ஜனாதிபதி தலைமையிலான பொஹொட்டுவ அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...