follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் விற்பனை வெகுவாக குறைவு

எரிபொருள் விற்பனை வெகுவாக குறைவு

Published on

எரிபொருள் விநியோகம் செய்பவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதாந்திர வருமானம் 30% – 40% வரை விற்பனையில் தொடர்ச்சியான குறைவு காரணமாக குறைந்துள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் இருப்பு ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் எனவும் தற்போது அதற்கு மூன்று நான்கு நாட்கள் ஆகும் எனவும் ஒன்றியத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.

இந்நிலைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அதிக வங்கி வட்டிக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை கூட நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள QR குறியீடு காரணமாக எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாகவும், ஒரு காருக்கு 80 லீட்டர் பெட்ரோல் பெறுவதற்கு 32,000 ரூபா செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமையால் எதிர்காலத்தில் QR குறியீடு தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...