மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய போது தரை இயக்க உபகரணங்களை கொள்வனவு செய்ததில் அரசாங்கத்திற்கு 883 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கை கையளித்து பராமரிக்க முடியாது என சஜின் வாஸ் குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த இந்த தீர்ப்பை வழங்கினார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.