follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1கொழும்பு விகாரையில் துருப்பிடித்த கைக்குண்டு மீட்பு!

கொழும்பு விகாரையில் துருப்பிடித்த கைக்குண்டு மீட்பு!

Published on

பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமகா விகாரையின் மதிலுக்கு அருகில் இருந்து இன்று (13) கைக் குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விகாரை வளாகத்தில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும், இது துருப்பிடித்த நிலையில் இருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.

விகாரையின் பணியாளர் இருவர் வழங்கிய தகவலுக்கமைய பொலிசார் குறித்த விகாரைக்குச் சென்று கைக்குண்டை மீட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைக்குண்டை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கைக்குண்டு கைவிடப்பட்ட நிலையில் இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை...

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...