ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது

448

ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு நாடு வெற்றிப் பாதைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது அவசியமானது என தெரிவித்த ஜனாதிபதி, இந்த இலக்கை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கடனுதவியை இலங்கை பெறும் சந்தர்ப்பத்தில், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகம் “பொருளாதார உரையாடல்-IMF மற்றும் அதற்கு அப்பால்” என்ற தலைப்பில் நடாத்திய மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here