பேருவளை கடலில் நிலநடுக்கம் – சுனாமி அச்சுறுத்தல் இல்லை

1130

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பேருவளையிலிருந்து 24 கிமீ தொலைவில் கடலில் ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் பல பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை அடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பேருவளையில் இருந்து கடலுக்குச் சென்றவர்கள் தொடர்பில், அங்குள்ளவர்கள் பதற்றமடைந்துள்ளதோடு அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு பெரும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here