புதிய பொது நிர்வாக செயலாளர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

316

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என்.ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

1990 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் இலங்கை நிர்வாக சேவையில் உயர் அதிகாரியாவார்.

இதற்கு முன்னர், இவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here