இ.போ.சபைக்கு விரைவில் புதிய ஆட்சேர்ப்பு

690

சுமார் 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் உள்ளன.

மேலும், 450 நடத்துனர்கள் பற்றாக்குறை இருப்பதாக லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார்.

புதிய ஆட்சேர்ப்பு மூலம் வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here