follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் குறித்த அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் குறித்த அறிவிப்பு

Published on

அரசாங்கத்தின் பணப்புழக்கத்தில் சுமை இருந்தாலும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,

“அரசின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் அரச ஊழியர்களுக்கு விசேட ஆதரவுடன் செயற்பட்டு வருகின்றது. இப்போது இவ்வாறானதொரு நிலையில் பல நாடுகளில் வரும் முதலாவது பிரேரணை அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். எனவே எமது நாட்டில், நாங்கள் இதைப் பற்றி நினைக்கவே இல்லை, ஏனென்றால், அரசு ஊழியர்களும் சிரமத்தில் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.

ஏப்ரல் மாதத்துக்குள் பணப் புழக்கத்தில் பெரிய சுமை ஏற்படும். பொதுவாக அரசு ஊழியருக்கு வழங்கப்படும் இந்த மாதம் 25ஆம் திகதிவழங்கப்படும் சம்பளத்தை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன் வழங்க வேண்டும். பணப்புழக்கத்தில் சுமை உள்ளது. ஓய்வூதியம் மற்றும் சமூர்த்தி 10ம் திகதிக்கு முன் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவித்தார்.

அரச ஊழியரைப் பற்றிய ஒரு தனிச்சிறப்பு. கடந்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் ஜனாதிபதி அறிவித்தார்… இந்த ஆண்டு இறுதிக்குள், அரச ஊழியருக்கு சிறப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...