தேசிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

585

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைநிலை தரங்களுக்கு புதிதாக மாணவர்களை சேர்ப்பது குறித்து எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பிறகு தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here