follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1திருத்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்காத பேருந்துகள் இன்று முதல் சோதனையிடப்படும்

திருத்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்காத பேருந்துகள் இன்று முதல் சோதனையிடப்படும்

Published on

டீசல் விலை குறைவினால் திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியலை காட்சிப்படுத்தாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று (03) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.

அதன்படி, திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியலை அனைத்து பயணிகளும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் எனவும், அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பேருந்துகளை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 29ம் திகதி டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், கடந்த 31ம் திகதி முதல் பேருந்து கட்டண திருத்தம் அமுலுக்கு வந்த நிலையில், ஏழு வட்டார அலுவலகங்கள் மூலம் பேருந்து உரிமையாளர்களுக்கு திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியல் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை சில பேருந்துகள் பயணிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் ஆவணத்தை காட்டாமல் அதிக கட்டணம் வசூலிக்க ஆசைப்படுவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து முறைப்பாடுகள் வந்ததாக கூறப்படுகிறது.

எனவே எதிர்வரும் 03ஆம் திகதி முதல் மேல்மாகாண டெர்மினல்களில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து பேருந்துகளும் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் திருத்தப்பட்ட கட்டண பட்டியலை கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செல்லாத பேருந்துகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 011 2 860 860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தலைவர் பிரசன்ன சஞ்சீவ கேட்டுக்கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...