follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுஐபிஎல் சென்ற பானுகவுக்கு காயம்

ஐபிஎல் சென்ற பானுகவுக்கு காயம்

Published on

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது இலங்கையின் பானுக ராஜபக்ஷ காயம் அடைந்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் 03ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய பானுக ராஜபக்ஷ ஒரு பந்தை மாத்திரமே எதிர்கொள்ள முடிந்தது. மறுமுனையில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஷிகர் தவான் அடித்த ஷாட் பானுகவின் கையில் பட்டது.

அதன்படி களத்தை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் துடுப்பாட்டத்திற்கு வரவில்லை. எவ்வாறாயினும், அவரது காயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 05 ஓட்டங்களால் தோற்கடித்து பஞ்சாப் கிங்ஸ் அணி வலுவான வெற்றியைப் பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...