follow the truth

follow the truth

May, 17, 2025
Homeவிளையாட்டுஐபிஎல் சென்ற பானுகவுக்கு காயம்

ஐபிஎல் சென்ற பானுகவுக்கு காயம்

Published on

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது இலங்கையின் பானுக ராஜபக்ஷ காயம் அடைந்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் 03ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய பானுக ராஜபக்ஷ ஒரு பந்தை மாத்திரமே எதிர்கொள்ள முடிந்தது. மறுமுனையில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஷிகர் தவான் அடித்த ஷாட் பானுகவின் கையில் பட்டது.

அதன்படி களத்தை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் துடுப்பாட்டத்திற்கு வரவில்லை. எவ்வாறாயினும், அவரது காயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 05 ஓட்டங்களால் தோற்கடித்து பஞ்சாப் கிங்ஸ் அணி வலுவான வெற்றியைப் பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள...

உலகின் பணக்கார விளையாட்டு வீரராக ரொனால்டோ

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக...

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...