follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉள்நாடுஅடுத்த நான்கு வருடங்களில் பொருளாதாரம் ஒரே திசையில் செல்ல வேண்டும்

அடுத்த நான்கு வருடங்களில் பொருளாதாரம் ஒரே திசையில் செல்ல வேண்டும்

Published on

நாட்டின் பொருளாதாரம் மீண்டு தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால், இன்னும் கடினமான காலம் வரவிருக்கிறது என்றும், பொருளாதாரம் ஒரு திசையில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த நான்கு வருடங்களில் பொருளாதாரம் ஒரே திசையில் செல்ல வேண்டும் என்றும், இரண்டு படிகள் முன்னோக்கி ஒரு அடி பின்வாங்கினால், தற்போதைய பொருளாதார நிலைக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மிகவும் கடினமான பயணத்தை ஒரு திசையில் தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சவால்களும் சிரமங்களும் வரலாம் என்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை ஒரே மதிப்பிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த 10 வருடங்களில் அரசாங்கத்தின் கடனை ஸ்திரப்படுத்துவது சவால்களில் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் உள்ள சீர்திருத்தங்கள் நான்கு வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமிந்த விஜேசிறி இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இது...

“சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான " சஞ்சாரக உதாவ 2025",...

அநுரவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜூன் 10 ஆம் திகதி தொடங்கும் என்று...