புத்தாண்டு விடுமுறைக்காக கிராமத்திற்கு செல்லும் மக்களின் வசதிக்காக காலை 10 மணி முதல் மேலதிக பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த விசேட பேருந்துகள் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
போதியளவு பேருந்துகள் இருப்பதாகத் தெரிவித்த அவர், அரை சொகுசு பேருந்துக் கட்டணத்தின் கீழ் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார்.