பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான சட்டமூலம்

699

பயங்கரவாத தடைச்சட்டம் தனக்காகவோ அல்லது அரசாங்கத்துக்காகவோ கொண்டுவரப்பட்ட சட்டமூலமல்ல, நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவான மற்றும் எதிரான விடயங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து அமைச்சர் பிபிசி சிங்களத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்;

“.. பயங்கரவாதச் செயலுக்கு வெகுஜன ஊடகங்கள், சமூக ஊடகங்கள் அல்லது வேறு ஏதேனும் ஊடகங்களைப் பயன்படுத்தினால், அவர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிடிபடுவார். இது நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பயங்கரவாத சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை தடை செய்வது சாத்தியம் என்ற விமர்சனம் தொடர்பில் கருத்து தெரிவித்த கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, பயங்கரவாத செயல் நிரூபிக்கப்பட்டால் அதனை செய்ய வேண்டும். அதை செய்யாத நாடு இல்லை. இல்லையெனில் ஒரு அரசாங்கம் பயனற்றது.

ஒரு கட்சிக்காகவோ அல்லது ஒரு தலைவருக்காகவோ எனது நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாத அரசியல்வாதி நான். நாட்டுக்கு ஏற்ற சகலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான சட்டமூலம். இறுதியாக இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனது தீர்மானம் அல்ல..

இது எனக்காகவோ அல்லது அரசாங்கத்துக்காகவோ அல்ல. இது நீண்டகாலமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் ஒன்று.

இவ்வாறு விமர்சிக்கும் அனைவரும் மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் போன்று நடந்தால் குனிந்து தயவு செய்து பயங்கரவாதச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று கூறுவார்கள் அதே குழுவினரே இவ்வாறு விமர்சிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு விமர்சிக்கின்றனர்..” என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here