follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகஞ்சன விஜேசேகரவிடம் CID வாக்குமூலம் பதிவு

கஞ்சன விஜேசேகரவிடம் CID வாக்குமூலம் பதிவு

Published on

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நாளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக சம்பவத்தின் சாட்சியாளர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

எரிபொருள் பௌசர்கள் புறப்படுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்காமை, விமான நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு தடை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு 03 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதாக தெரிவித்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கடந்த நாட்களில் பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததுடன், சுமார் 20 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...