follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகஞ்சன விஜேசேகரவிடம் CID வாக்குமூலம் பதிவு

கஞ்சன விஜேசேகரவிடம் CID வாக்குமூலம் பதிவு

Published on

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நாளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக சம்பவத்தின் சாட்சியாளர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

எரிபொருள் பௌசர்கள் புறப்படுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்காமை, விமான நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு தடை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு 03 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதாக தெரிவித்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கடந்த நாட்களில் பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததுடன், சுமார் 20 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...