follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொலிஸ் உயரதிகாரிகளுக்கு பண்டிகை முன்பண கொடுப்பனவுகள் இல்லையாம்

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பண்டிகை முன்பண கொடுப்பனவுகள் இல்லையாம்

Published on

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முன்பணத்தை பொலிஸ் பரிசோதகர் மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்திலான அதிகாரிகளுக்கு வழங்காமல் இருக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் மட்டுமே பண்டிகை முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட பொலிஸ் திணைக்களத்தின் ஏறக்குறைய 7,000 உயர் அதிகாரிகள் மிகவும் கவலையடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து உயர் அதிகாரிகளின் பெயர்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு முன்பணம் வைத்திருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுக்கு நேற்று (6) முதல் பணம் வழங்கப்படும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...