follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின் பாவனை குறையவில்லை

மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின் பாவனை குறையவில்லை

Published on

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மின் பாவனையில் குறைவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் சிஸ்டம் கட்டுப்பாட்டு அலகின் தரவு விளக்கப்படத்தை முன்வைத்த அவர், மார்ச் மாதத்திற்கான சராசரி மின்சார உற்பத்தி 44.22 ஜிகாவாட் மணிநேரம் என சுட்டிக்காட்டினார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் எரிசக்தி தேவை குறையும் பட்சத்தில் சராசரி மின் உற்பத்தி 40.5 ஜிகாவாட் மணிநேரமாக குறையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, ஊடகங்கள் ஊகித்து வருவதற்கு மாறாக மின்சாரத் தேவைக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என அமைச்சர் தனது டுவிட்டரில் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...