follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சமுர்த்தி வங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 805 மில்லியன் செலவிட திட்டம்

சமுர்த்தி வங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 805 மில்லியன் செலவிட திட்டம்

Published on

தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நாடளாவிய ரீதியில் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி நிதியத்தில் இருந்து 805 இலட்சம் ரூபாவை மிகவும் சிரமமான நேரத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு செலவிடுவதை விட்டு இந்தத் தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக அவர் கூறுகிறார்.

அத்துடன், பதவி உயர்வு பெற்று ஏறக்குறைய 28 வருடங்களாக பணிபுரியும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தவிர்த்து வருவதாக தேசிய அமைப்பாளர் கூறுகிறார்.

இந்த உண்மைகளின் அடிப்படையில் பிரச்சினைகளை தீர்க்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி சமுர்த்தி வங்கிகள் ஏப்ரல் 15 ஆம் திகதி மூடப்பட்டு ‘சுப நேர’ பரிவர்த்தனைகளில் இருந்து விலகுவதாக அவர் மேலும் கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...