follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1நிதி இராஜாங்க அமைச்சர் சிறப்பு கூட்டத்திற்காக வாஷிங்டனுக்கு

நிதி இராஜாங்க அமைச்சர் சிறப்பு கூட்டத்திற்காக வாஷிங்டனுக்கு

Published on

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச பங்காளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை நம்புவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாளை (10) வாஷிங்டனில் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான விசேட சந்திப்பில் அதற்கான சிறந்த சந்தர்ப்பம் அமையும் என இராஜாங்க அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நாளை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இணைய உள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் அது தொடர்பான பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும்...

சிறுமிகள் வழக்கில் டிரம்ப் தொடர்பு? – எலான் மஸ்க் கிளப்பிய பெரும் சர்ச்சை

அமெரிக்க ஜனதிபதி டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபா கொடுப்பனவு

அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன்,...